Skip to main content

Posts

My new articles

Recent posts

கல்வியின் சிறப்பு

கல்வியின் சிறப்பு 57.  'நான் நபி(ஸல்) அவர்களிடம் தொழுகையை நிலை நிறுத்துவதாகவும், ஸக்காத் வழங்குவதாகவும், ஒவ்வொரு முஸ்லிமுக்கும் நன்மையே நாடுவதாகவும் உறுதி மொழி எடுத்தேன்"ஜரீர் இப்னு அப்தில்லாஹ்(ரலி) அறிவித்தார். Volume :1 Book :3 58.  (முஆவியாவின் ஆட்சிக் காலத்தில் ஆளுனராக இருந்த) முகீரா இப்னு ஷுஅபா(ரலி) இறந்த நாளில் ஜரீர் இப்னு அப்தில்லாஹ்(ரலி) எழுந்து மேடையில் நின்று இறைவனைப் போற்றிப் புகழ்ந்துவிட்டு, 'புதிய தலைவர் வரும் வரை இணையற்ற ஏக இறைவனுக்கு அஞ்சுவதையும், அடக்கத்தையும், அமைதியையும் கடமையாகக் கொள்ளுங்கள். இதோ இப்போது உங்களின் புதிய தலைவர் வந்து கொண்டிருக்கிறார்' என்றார். பின்னர் தொடர்ந்து, '(இறந்த) தலைவருக்காகப் பிழை பொறுக்கத் தேடுங்கள். ஏனெனில் அவர், பாவம் மன்னிக்கப்படுவதை விரும்பக்கூடியவராக இருந்தார்' என்றார். மேலும், 'நான் ஒரு முறை நபி(ஸல்) அவர்களிடம் சென்று 'இஸ்லாத்தைத் தழுவுவதாகத் தங்களிடம் உறுதி மொழி எடுக்க வந்திருக்கிறேன்' என்றேன். அப்போது அவர்கள், 'முஸ்லிம்கள் ஒவ்வொருவருக்கும் நலம் நாட வேண்டும்' என்று எனக

நபி(ஸல்) அவர்களின்) சிறப்புகள்

நபி(ஸல்) அவர்களின்) சிறப்புகள் 3489.  ஸயீத் இப்னு ஜுபைர்(ரஹ்) அறிவித்தார் "மனிதர்களே! நாம் உங்களை ஓர் ஆணிலிருந்தும், ஓர் பெண்ணிலிருந்தும் படைத்தோம். பிறகு, நீங்கள் ஒருவருக்கொருவர் அறிமுகமாகிக் கொள்ளும் பொருட்டு உங்களைப் பல சமூகங்களாகவும் குலங்களாகவும் ஆக்கினோம்' (திருக்குர்ஆன் 49:13) என்னும் இறைவசனத்தில் இடம் பெற்றுள்ள 'ஷுவூப் சமூகங்கள்' என்னும் சொல் பெரிய இனங்களையும் 'கபாயில் - குலங்கள்' என்னும் சொல், அந்த இனங்களில் உள்ள உட் பிரிவுகளையும் குறிக்கும்" என்று இப்னு அப்பாஸ்(ரலி) கூறினார். Volume :4 Book :61 3490.  அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார் "இறைத்தூதர் அவர்களே! மக்களில் கண்ணியத்திற்குரியவர் யார்?' என்று (நபி(ஸல்) அவர்களிடம்) கேட்கப்பட்டது. அதற்கு நபியவர்கள், 'அவர்களில் இறையச்சமுடையவரே" என்று பதிலளித்தார்கள். மக்கள், 'நாங்கள் இதைப் பற்றி உங்களிடம் கேட்கவில்லை" என்றனர். உடனே, நபி(ஸல்) அவர்கள், 'அப்படியென்றால் அல்லாஹ்வின் தூதரான யூசுஃப் அவர்கள் தாம் (மக்களில் கண்ணியத்திற்குரியவர்கள்)" என்று கூறினார்கள். V

உயர்ந்தோனை நோக்கி..... புறப்படுவதற்கான அறிகுறிகள்

அல்லாஹ்வின் திருபெயரால்...... எல்லாப் புகழும் புகழ்ச்சியும் அல்லாஹ் ஒருவனுக்கே உரித்தாக! இந்த சம்பவம் ஒரு உருக்கமான சம்பவம் என்று கூறலாம்.......... நமக்கு நிறைய படிப்பினைகள் இருக்கின்றன. அழைப்புப் பணி நிறைவுற்று . இஸ்லாம் நிலைமைகளை தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரும் போது இவ்வுலக வாழ்க்கையிலிருந்தும் அதில் வாழ்பவர்களிடமிருந்தும் விடைபெறும் அறிகுறிகள் நபி [ஸல்] அவர்களின் உணர்வுகளில் தோன்றின. அவர்களது சொல் செயல்களிலும் வெளிப்பட்டன.

ஈமான் கொண்டோம் என்பதற்காக துன்புறுத்தப்பட்டார்கள்

அல்லாஹ்வின் திருபெயரால் ............. எல்லாப் புகழும் புகழ்ச்சியும் அல்லாஹ் ஒருவனுக்கே உரித்தாக! அண்ணல் நபி [ஸல்] அவர்களின் வாழ்வில் நமக்கு நிறைய பாடங்களும், படிப்பினைகளும் இருக்கின்றன. அண்ணல் நபி [ஸல்] அவர்களை பின்பற்றுவதினால் தான் வெற்றி இருக்கு என்பதை நாம் உணர வேண்டும். அம்மார் இப்னு யாஸிர் [ரலி] , அவர்களது தகப்பனார் யாஸிர் , தாயார் ஸூமைய்யா ஆகிய மூவரும் மக்ஜூம் கிளையைச் சேர்ந்த அபூ ஹூதைஃபா இப்னு முகீரா என்பவனின் அடிமைகளாக இருந்தார்கள். மூவரும் இஸ்லாமைத் தழுவினர் .இம்மூவரையும் அபூஜஹ்ல் தலைமையில் ஒரு கூட்டம்  'அப்தஹ் ' என்ற இடத்துக்கு அழைத்துச் சென்று மதிய வேளையில் சுடுமணலில் கிடத்தி கடுமையாக சித்திரவதை செய்தனர் . இதனைக் கண்ட நபி [ஸல்] அவர்கள்  ''யாஸிரின் குடும்பத்தாரே! பொறுமையை மேற்கொள்ளுங்கள் . உங்களுக்கு சொர்க்கம் வாக்களிக்கப்பட்டுள்ளது'' என ஆறுதல் கூறினார்கள். நிராகரிப்பவகர்களின் வேதனையாலேயே யாஸிர் [ரலி] இறந்துவிட்டார்கள். வயது முதிர்ந்த இயலாதவராக இருந்த அம்மாரின் தாயாரான சுமைய்யா பின்த் கய்யாத் [ரலி] அவர்களை அபூஜஹ்ல் அவர்களது பெண்ணுறுப்பில் ஈட்டிய

துன்புறுத்துதல் ஈமான் கொண்டவர்களை !

அல்லாஹ்வின் திருபெயரால் ........ எல்லாப் புகழும் புகழ்ச்சியும் அல்லாஹ் ஒருவனுக்கே உரித்தாக! ஈமான் கொண்டார்கள் என்பதற்காக துன்புறுத்தப்பட்டார்கள். எந்தளவுக்கு என்றால் ஈமான் கொண்டவர்களின் உயிர்கள் போகும் அளவுக்கு அவர்கள் பல வேதனைகளைச் சுவைத்தார்கள் . ஆனால் அவர்களின் உயிர்தான் போனது , ஈமான் உறுதியாக இருந்தது.

அழைப்புப் பணியில் இடையூறுகள்

அல்லாஹ்வின் திருபெயரால் ... எல்லாப் புகழும் புகழ்ச்சியும் அல்லாஹ் ஒருவனுக்கே உரித்தாக! அண்ணல் நபி [ஸல்] அவர்கள் அழைப்புப் பணியும்போது , அவர்கள் பட்ட கஷ்ட்டங்கள் , சிரமங்கள் சொல்லிமாளது . எழுத்தால் அவைகளை எழுத முடியாது. வார்த்தைகளால் சொல்ல முடியாது. அண்ணலார் பட்ட கஷ்ட்டங்கள் அதிகம் அதிகம் , மிக பெரிய தியாகம் செய்தார்கள் . அழைப்புப் பணியும்போது அண்ணலார் பொறுமையும், சகிப்புத்தன்மையும் , நிதானமும் , அழகிய முறையில் த ஃ வா பணிச் செய்தார்கள். பல தொல்லைகள்ளும் , சிரமங்களும் இருந்தன. ஆனால் , இன்று சில மக்கள்கள் மார்க்கத்தின் பெயரால் நிறைய மூடபழக்கங்கள் , புது புது நூதன காரியங்கள் செய்து வருகிறார்கள். அண்ணல் நபி [ஸல்] அவர்கள் காட்டிய வழிமுறைகளை விட்டுவிட்டு , மாற்றுமத கலாச்சாரத்தில் முழ்கி இருக்கிறார்கள் . சுன்னத்தான காரியத்தை செய்யாமல் , பித் ஆ செய்துக் கொண்டு இருக்கிறார்கள். முக்கியமாக சில பெண்கள் மார்க்கத்துக்கு மாற்றமான காரியங்களை செய்துக் கொண்டுதான் இருக்கிறார்கள் . சமீபத்தில் பார்த்தது facebook வழியாக , சில முஸ்லிம் பெண்கள் பர்தா போட்டுக் கொண்டு கோயிகளுக்கு போவதையும் , அங்கு அர்ச்சனை