அல்லாஹ்வின் திருபெயரால் ........
எல்லாப் புகழும் புகழ்ச்சியும் அல்லாஹ் ஒருவனுக்கே உரித்தாக!
ஈமான் கொண்டார்கள் என்பதற்காக துன்புறுத்தப்பட்டார்கள். எந்தளவுக்கு என்றால் ஈமான் கொண்டவர்களின் உயிர்கள் போகும் அளவுக்கு அவர்கள் பல வேதனைகளைச் சுவைத்தார்கள் . ஆனால் அவர்களின் உயிர்தான் போனது , ஈமான் உறுதியாக இருந்தது.
நபி [ஸல்] அவர்களின் பகிரங்க அழைப்பைத் தொடர்ந்து பல மாதங்கள் எதிரிகள் மேற்கொண்ட தடுப்பு முயற்சிகள் அனைத்தும் தோல்வியைத் தழுவின . தாங்கள் கையாண்ட வழிமுறைகளால் எவ்வித பயனுமில்லை என்று அவர்களின் அறிவுக்கு மெதுவாக உரைத்த அடுத்த கட்ட நடவடிக்கையாக மாற்று வழியைக் கையாண்டனர் . அதாவது, ஒவ்வொரு சமூகத்தலைவரும் எஜமானரும் தன்னுடைய ஆளுமையின் கீழுள்ளவர்கள், அடிமைகள்- இவர்களின் யாராவது இஸ்லாமைத் தழுவினால் அவர்களைத் துன்புறுத்த வேண்டும். அவர்களுக்கு இன்னல்கள் விளைவிக்க வேண்டும் என முடிவு செய்தனர்.
தலைவர்களுடன் அவர்களது எடுபிடிகளும் சேர்ந்துகொண்டு முஸ்லிம்களை வாட்டி வதைத்தனர். குறிப்பாக, சாதாரண எளிய முஸ்லிம்களுக்கு அவர்கள் தந்த நோவினைகளைக் கேட்கும்போதே உள்ளம் கசிந்துருகும் . அவற்றை சொல்லி மாளாது .
செல்வமும் செல்வாக்குமுள்ள ஒருவர் இஸ்லாமைத் தழுவினால் அவரிடம் அபூஜஹ்ல் நேரே சென்று '' உன் செல்வத்தையும் செல்வாக்கையும் ஒன்றுமில்லாமளாக்கி விடுவேன்' என்று மிரட்டுவான். அவர் கொஞ்சம் பலமில்லாதவராக இருந்தால் அடித்துத் துபுருத்துவான்.
[இப்னு ஹிஷாம் ]
உஸ்மான் [ரலி] அவர்களது தந்தையின் சகோதரர் அப்பாவி முஸ்லிம்களை பேரீத்தங்ககீற்றுப் பாயில் சுருட்டி வைத்து அதற்குக் கீழே புகை மூட்டி மூச்சு திணறடிப்பர் . [ரஹ்மத்துல்லில் ஆலமீன் ]
தனது மகன் முஸ்லிமாகி விட்டதை அறிந்த முஸ் அப் இப்னு உமைர் [ரலி] அவர்களின் தாயார் அவருக்கு உணவு, தண்ணீர் கொடுக்காமல் வீட்டிலிருந்து விரட்டிவிட்டார். மிக ஆடம்பரமாக வாழ்ந்து வந்த அவர் பெரும் துன்பத்தை அனுபவித்தார் . பசி பட்டினி என்ற வறண்ட வாழ்க்கையினால் அவர்களது மேனியின் தோல் சுருங்க ஆரம்பித்தது . [அசதுல் காபா ]
ஸூ ஹைப் இப்னு ஸினான் [ரலி] நினைவிழக்கும் வரை கடுமையாக தாக்கப்படுவார்.
பிலால் [ரலி] அவர்கள் உமய்யா இப்னு கல ஃ புடைய அடிமையாக இருந்தார்கள். உமையா அவர்களது கழுத்தில் கயிற்றைக் கட்டி சிறுவர்களிடம் கொடுப்பான். சிறுவர்கள் அவரை மக்காவின் முரடான மலைப் பாதைகளில் இழுத்துச் செல்வார்கள். கயிற்றின் அடையாளம் அவர்களது கழுத்தில் பதிந்துவிடும் . அவர்கள் 'அஹத் 'அஹத் ! என்று சொல்லிக் கொண்டிருப்பார்கள். சில வேளைகளில் உமையா பிலாலை மிக இறுக்கமாகக் கட்டி தடியால் கடுமையாகத் தாக்குவான். பிறகு சூரிய வெப்பத்திலும் போடுவான். உணவளிக்காமல் பசியால் துடிக்க வைப்பான். சுட்டெரிக்கும் சூரிய வெப்பத்தில் பாலைவன மணலில் கிடத்தி அவர்களது நெஞ்சின் மீது பாறாங்கல்லைத் தூக்கி வைப்பான். அப்போது பிலாலை நோக்கி, ''அல்லாஹ்வின் மீதாணையாக ! நீ சாக வேண்டும். அல்லது முஹம்மதின் மார்க்கத்தை நிராகரித்து லாத் உஜ்ஜாவை வணங்க வேண்டும். அதுவரை நீ இப்படியேதான் இருப்பாய். உன்னை விடவே மாட்டேன்.'' என்பான் . அதற்கு பிலால் [ரலி] அஹத்! என்று சொல்லிக் கொண்டே, இந்த 'அஹத் என்ற வார்த்தையைவிட உனக்கு ஆவேசத்தை உண்டு பண்ணும் வேறொரு வார்த்தை எனக்குத் தெரிந்தால் நான் அதையே கூறுவேன்'' என்பார்கள்.
ஒரு நாள் பிலால் [ரலி] சித்திரவதைக்குள்ளாகி இருக்கும்போது அவர்களைக் கடந்து சென்ற அபூபக்ர் [ரலி] அவர்கள் ஒரு ஹபஷி அடிமையை கிரயமாகக் கொடுத்து பிலால் [ரலி] அவர்களை வாங்கி உரிமை விட்டார்கள். சிலர் ''ஐந்து அல்லது எழு ஊகிய வெள்ளிக்குப் பகரமாக வாங்கி உரிமை விட்டார்கள்'' என்று கூறுகின்றனர். [இப்னு ஹிஷாம்]
இன்ஷாஅல்லாஹ் இன்னும் தொடரும்..............
எல்லாப் புகழும் புகழ்ச்சியும் அல்லாஹ் ஒருவனுக்கே உரித்தாக!
ஈமான் கொண்டார்கள் என்பதற்காக துன்புறுத்தப்பட்டார்கள். எந்தளவுக்கு என்றால் ஈமான் கொண்டவர்களின் உயிர்கள் போகும் அளவுக்கு அவர்கள் பல வேதனைகளைச் சுவைத்தார்கள் . ஆனால் அவர்களின் உயிர்தான் போனது , ஈமான் உறுதியாக இருந்தது.
நபி [ஸல்] அவர்களின் பகிரங்க அழைப்பைத் தொடர்ந்து பல மாதங்கள் எதிரிகள் மேற்கொண்ட தடுப்பு முயற்சிகள் அனைத்தும் தோல்வியைத் தழுவின . தாங்கள் கையாண்ட வழிமுறைகளால் எவ்வித பயனுமில்லை என்று அவர்களின் அறிவுக்கு மெதுவாக உரைத்த அடுத்த கட்ட நடவடிக்கையாக மாற்று வழியைக் கையாண்டனர் . அதாவது, ஒவ்வொரு சமூகத்தலைவரும் எஜமானரும் தன்னுடைய ஆளுமையின் கீழுள்ளவர்கள், அடிமைகள்- இவர்களின் யாராவது இஸ்லாமைத் தழுவினால் அவர்களைத் துன்புறுத்த வேண்டும். அவர்களுக்கு இன்னல்கள் விளைவிக்க வேண்டும் என முடிவு செய்தனர்.
தலைவர்களுடன் அவர்களது எடுபிடிகளும் சேர்ந்துகொண்டு முஸ்லிம்களை வாட்டி வதைத்தனர். குறிப்பாக, சாதாரண எளிய முஸ்லிம்களுக்கு அவர்கள் தந்த நோவினைகளைக் கேட்கும்போதே உள்ளம் கசிந்துருகும் . அவற்றை சொல்லி மாளாது .
செல்வமும் செல்வாக்குமுள்ள ஒருவர் இஸ்லாமைத் தழுவினால் அவரிடம் அபூஜஹ்ல் நேரே சென்று '' உன் செல்வத்தையும் செல்வாக்கையும் ஒன்றுமில்லாமளாக்கி விடுவேன்' என்று மிரட்டுவான். அவர் கொஞ்சம் பலமில்லாதவராக இருந்தால் அடித்துத் துபுருத்துவான்.
[இப்னு ஹிஷாம் ]
உஸ்மான் [ரலி] அவர்களது தந்தையின் சகோதரர் அப்பாவி முஸ்லிம்களை பேரீத்தங்ககீற்றுப் பாயில் சுருட்டி வைத்து அதற்குக் கீழே புகை மூட்டி மூச்சு திணறடிப்பர் . [ரஹ்மத்துல்லில் ஆலமீன் ]
தனது மகன் முஸ்லிமாகி விட்டதை அறிந்த முஸ் அப் இப்னு உமைர் [ரலி] அவர்களின் தாயார் அவருக்கு உணவு, தண்ணீர் கொடுக்காமல் வீட்டிலிருந்து விரட்டிவிட்டார். மிக ஆடம்பரமாக வாழ்ந்து வந்த அவர் பெரும் துன்பத்தை அனுபவித்தார் . பசி பட்டினி என்ற வறண்ட வாழ்க்கையினால் அவர்களது மேனியின் தோல் சுருங்க ஆரம்பித்தது . [அசதுல் காபா ]
ஸூ ஹைப் இப்னு ஸினான் [ரலி] நினைவிழக்கும் வரை கடுமையாக தாக்கப்படுவார்.
பிலால் [ரலி] அவர்கள் உமய்யா இப்னு கல ஃ புடைய அடிமையாக இருந்தார்கள். உமையா அவர்களது கழுத்தில் கயிற்றைக் கட்டி சிறுவர்களிடம் கொடுப்பான். சிறுவர்கள் அவரை மக்காவின் முரடான மலைப் பாதைகளில் இழுத்துச் செல்வார்கள். கயிற்றின் அடையாளம் அவர்களது கழுத்தில் பதிந்துவிடும் . அவர்கள் 'அஹத் 'அஹத் ! என்று சொல்லிக் கொண்டிருப்பார்கள். சில வேளைகளில் உமையா பிலாலை மிக இறுக்கமாகக் கட்டி தடியால் கடுமையாகத் தாக்குவான். பிறகு சூரிய வெப்பத்திலும் போடுவான். உணவளிக்காமல் பசியால் துடிக்க வைப்பான். சுட்டெரிக்கும் சூரிய வெப்பத்தில் பாலைவன மணலில் கிடத்தி அவர்களது நெஞ்சின் மீது பாறாங்கல்லைத் தூக்கி வைப்பான். அப்போது பிலாலை நோக்கி, ''அல்லாஹ்வின் மீதாணையாக ! நீ சாக வேண்டும். அல்லது முஹம்மதின் மார்க்கத்தை நிராகரித்து லாத் உஜ்ஜாவை வணங்க வேண்டும். அதுவரை நீ இப்படியேதான் இருப்பாய். உன்னை விடவே மாட்டேன்.'' என்பான் . அதற்கு பிலால் [ரலி] அஹத்! என்று சொல்லிக் கொண்டே, இந்த 'அஹத் என்ற வார்த்தையைவிட உனக்கு ஆவேசத்தை உண்டு பண்ணும் வேறொரு வார்த்தை எனக்குத் தெரிந்தால் நான் அதையே கூறுவேன்'' என்பார்கள்.
ஒரு நாள் பிலால் [ரலி] சித்திரவதைக்குள்ளாகி இருக்கும்போது அவர்களைக் கடந்து சென்ற அபூபக்ர் [ரலி] அவர்கள் ஒரு ஹபஷி அடிமையை கிரயமாகக் கொடுத்து பிலால் [ரலி] அவர்களை வாங்கி உரிமை விட்டார்கள். சிலர் ''ஐந்து அல்லது எழு ஊகிய வெள்ளிக்குப் பகரமாக வாங்கி உரிமை விட்டார்கள்'' என்று கூறுகின்றனர். [இப்னு ஹிஷாம்]
இன்ஷாஅல்லாஹ் இன்னும் தொடரும்..............
Comments
Post a Comment